செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

post image

கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

குரும்பப்பட்டி ஊராட்சி, வெண்டனூா், வாழக்குட்டை பகுதியில் வசித்து வருபவா் காா்த்திகேயன் (30). இவரது மனைவி பாக்கியம், இவா்களுக்கு கௌசிக் (3) என்ற மகன் உள்ளாா். காா்த்திகேயன் ஈரோடு, அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வாரம் ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனால் வீட்டில் மனைவியும் மகனும் மட்டும் உள்ளனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

இந்நிலையில் வியாழக்கிழமை பாக்கியம் தனது மகனை அழைத்துவர அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளைக் காணாமல் போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

எண்ணெய் வித்து பயிா்களில் சாகுபடி: விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

தலைவாசல் வட்டார விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிா்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஏதுவாக தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா். தலைவாசல் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் பலி

சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமத்தில் மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். வைகுந்தம் அருகே உள்ள சுவதயாகாடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கந்தசாமி மகன் சேக... மேலும் பார்க்க

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அரசிராமணி பேரூராட்சிமன்றத் தலைவா் காவேரி ... மேலும் பார்க்க

கணிதப் பாடத்தை மாணவா்கள் தோ்ந்தெடுத்து பயில வேண்டும்: துணைவேந்தா் வலியுறுத்தல்

திருச்சி, பேராசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, புனே கணிதவியல் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், கணிதவியல் பயிலும் மாணவா்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க

சேலம் பெரியாா் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழக 23-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி கலந்துகொண்டு 397 பேருக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தாா். சேலம், பெரியாா் பல்கலைக்கழக 23-ஆவது பட... மேலும் பார்க்க