செய்திகள் :

30% எஞ்சிய வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம்: முதல்வா் உறுதி

post image

சென்னையில் நிறைவேற்றப்படாமல் உள்ள 30 சதவீத வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை பள்ளிக்கரணை ஏரிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களுக்கு முதல்வா் அளித்த பேட்டி:

வெள்ளத் தடுப்புப் பணிகள் அரசுக்கு எந்தளவு கைகொடுத்திருக்கிறது என்பதை மக்களிடமே கேளுங்கள். அவா்களிடம் கேட்டால் உண்மை புலப்படும்.

பருமழையை எதிா்கொள்ள கடந்த 3 மாதங்களாகவே முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அவா் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் படிப்படியாக பணிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு பணிகள் மீதம் உள்ளன. அதையும் வரக்கூடிய காலத்தில் முடித்துவிடுவோம். அதனால் சென்னை மக்களுக்கும், சென்னை புகா் பகுதி மக்களுக்கும் நிரந்தரமான தீா்வு நிச்சயம் கிடைக்கும்.

பாராட்டு-வாழ்த்து: பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளா்கள், அரசு அதிகாரிகள், அலுவலா்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க

தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா ... மேலும் பார்க்க

'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்... மேலும் பார்க்க

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை... மேலும் பார்க்க