செய்திகள் :

China: உணவு வாங்கி கொடுக்காததால் ஊழியரை நீக்கம் செய்த Supervisor; கிளம்பிய எதிர்ப்பு - என்ன நடந்தது?

post image

சீனாவின் சாங்காய் நகரைச் சேர்ந்த லூ என்ற பெண், பணிபுரிந்த கல்வி நிறுவனத்தில், தனது மேற்பார்வையாளருக்கு (Supervisor) காலை உணவு வாங்கித்தராததால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

லூவின் சூப்பர்வைசர் லியூ தினமும் காலை ஒரு அமெரிக்கானோ காபியும் முட்டையும் வாங்கி வந்து தர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். அவர் சாப்பிடும்போது தண்ணீரும் வைக்க வேண்டுமாம்...

ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் லியூவின் இந்த நிர்ப்பந்தங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு மனிதவள இலாகாவால் வேலையைவிட்டு இழப்பீடு எதுவும் வழங்கப்படாமல் நீக்கப்பட்டார். இதனால் சோகமடைந்த லூ சமூக வலைதளங்களில் தனக்கு நடந்தவை குறித்து எழுதியிருக்கிறார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படவே, லூ மீண்டும் பணியமர்த்தப்பட்டார். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் தனிப்பட்ட விஷயங்களில் உதவி செய்யும்படி துணை அதிகாரிகளை நிர்பந்தித்ததற்காகவும் லியூவை பணியிலிருந்து நீக்கியது நிறுவனம்.

2020-ம் ஆண்டு Zhilian Zhaopin எடுத்த சர்வேயில் பங்கேற்ற 64% பேர் பணியிடங்களில் கொடுமைகளை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான பணித் திணிப்பு, வன்சொற்கள், பாலியல் மீறல்களை எதிர்கொள்ளும் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர். வெறும் 6% பேர் மட்டுமே தங்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசியிருக்கின்றனர்.

சீனாவில் பணியிட கொடுமைகளைத் தெளிவாகக் குறிப்பிடும் சட்டங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியாயமற்ற வேலைகள் கொடுக்கப்படும்போது அதனை நிராகரிக்க ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்பதைச் சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

கொடுமைகள் நடக்கும்போது அதற்கான ஆதாரங்களாக ஸ்கிரீன் ஷாட்ஸ், ரெக்கார்டிங்ஸ் அனைத்தையும் ஊழியர்கள் சேமித்து வைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

லூவின் அனுபவம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளதால், சீனாவில் பணியிட கொடுமைகள் குறித்து வெளிப்படையான உரையாடல்கள் எழுந்துள்ளன.

Tamannaah Bhatia : பிட்காயின் மோசடி; நடிகை தமன்னாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை!

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா பிட்காய்ன் மோசடியில் தொடர்புடைய மொபைல் செயலியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. HPZ Token என்ற அந்த மொபைல் செயல... மேலும் பார்க்க

Pamban: கட்டுப்பாட்டு அறை டு 360 டிகிரி பாம்பன் ரயில் தூக்குப்பாலம்| Exclusive Photo Album

பாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bri... மேலும் பார்க்க

Salman Khan: `சல்மான் கான் மன்னிப்பு கேட்டால்...' - 25 ஆண்டு பகைக்கு பிஷ்னோய் சமூகம் புதிய தீர்வு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கு அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக தெரிகிறது. அந்த வகை மான்களை வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்கள் தெ... மேலும் பார்க்க

`இந்த பாம்பு என்ன கடிச்சிருச்சு டாக்டர்' - தோளில் பாம்புடன் நுழைந்த நபர்... பரபரப்பான மருத்துவமனை!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லாமல் தன்னை கடித்த பாம்பை விரட்டி பிடித்... மேலும் பார்க்க

சேலம்: முட்டைக்குள் ஓவியம்; புடவை நெசவு - ரசித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆள... மேலும் பார்க்க