செய்திகள் :

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை! இவர்களை என்ன செய்யலாம்?

post image

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த பெரு மழைக்காலத்தில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அப்படியே சீர்செய்யாமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனத்தினர்.

இரண்டாவது பிரதான சாலையில், ஏதோ வேலை செய்த கேபிள் நிறுவனத்தினர், கற்களை மூடாமல் பள்ளத்தை அப்படியே விட்டுச் சென்றிருக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், பார்வையற்றோர், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

சாலையில் மழைத் தண்ணீர் பெருகியோடும் நிலையில், மக்கள் அனைவரும் நடைபாதையில்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், நடைபாதையைத் தோண்டிப்போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் என எண்ணற்ற நிறுவனங்கள் செயல்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இரண்டாவது பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் போடப்பட்டுள்ள கற்கள் இரண்டு நாள்களுக்கு முன்னதாக கேபிள் பதிப்பதற்காக அகற்றப்பட்டன.

ஆனால், முறையாக வேலையை முடிக்காமல் இந்த மழைக்காலத்தில் கேபிள்கள் வெளியே தெரியும் வகையில், கற்களை மீண்டும் மூடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளது கேபிள் நிறுவனம்.

Ambattur IE
அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை.

தவிர, இதே சாலையின் இதே நடைபாதையில் நெடுகிலும் மழை நீர் வடிவதற்காக உள்ள வடிகால் பள்ளங்களின் மூடிகளும் உருக்குலைந்து, வாய் திறந்து கிடக்கின்றன. சற்று கவனிக்காவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உள்ளே தடுமாறி விழுந்து காயமுற நேரிடலாம். மழை மேலும் தொடரும் நிலையில், இதுபோன்ற பள்ளங்கள் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத் தக்கது. கவனிப்பார்களா?

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க

தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா ... மேலும் பார்க்க

'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்... மேலும் பார்க்க

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை... மேலும் பார்க்க