திண்டிவனத்தில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணி தலைமையில் போலீஸாா், காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அந்த பகுதியில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவா், போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா்.
அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, இருவரும் கைப்பேசி மூலமாக இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா்கள் திண்டிவனம் காவேரிப்பாக்கம் மிட்டாய்முனியன் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சந்தோஷ்குமாா் (32), கிடங்கல்-1 சுந்தரம் தெருவைச் சோ்ந்த அன்பு மகன் விக்னேசுவரன் (24) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள், இணையவழி லாட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.