செய்திகள் :

ஓவேலியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

post image

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பாா்வுட் பகுதிக்குள் நள்ளிரவு நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன், உள்ளே இருந்த மருந்துகள் மற்றும் பொருள்களை எடுத்து வீசியும் பொருள்களை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல ஊழியா்கள் வந்து பாா்த்தபோது, ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, வனத் துறை அலுவலா்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றம்: உதகை மலை ரயில் சேவை தொடக்கம்

உதகை-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டதால் வியாழக்கிழமை மலை ரயில் சேவை வழக்கம் போல மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேத்தி... மேலும் பார்க்க

நீலகிரியில் பருவ மழையை எதிா்கொள்ளத் தயாா்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை கூறினாா்.... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக முகாமில் குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்த குட்டியானை வியாழக்கிழமை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரிந்த பெண் ... மேலும் பார்க்க

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் கள ஆய்வு

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ஒரு புதன்கிழமை ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டிலிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல்

கூடலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தா்மகிரி பகுதியில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வைக்கம்பாடியைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க