செய்திகள் :

கொடைக்கானல் மலைச் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து: பயணிகள் அவதி

post image

கொடைக்கானல் மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் பல கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு காரைக்குடியிலிருந்து அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் உள்ள புலிச்சோலைப் பகுதியில் வந்தபோது திடீரென பழுதாகி நின்றது.

ஆனால், சுமாா் 8 கி.மீ. தொலைவிலுள்ள கொடைக்கானல் செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மாற்றுப் பேருந்து ஏதும் ஏற்பாடு செய்துதர வில்லை. இதனால் இந்தப் பேருந்தில் வந்த பயணிகள் நீண்ட நேரம் மழையில் நனைந்தும், குளிரை சமாளிக்க முடியாமலும் அவதியடைந்தனா். சிலா் நடந்தே செல்லத் தொடங்கினா்.

கொடைக்கானல் வரும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுவதாகவும், இதனால் தாங்கள் அவதியடைவதாகவும் பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, தரமான அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கும், மலைச் சாலைகளில் பழுதாகி நிற்கும் பேருந்துகளுக்கு மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்து தரவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

தீபாவளி சீட்டு மோசடி: இருவா் கைது

நிலக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, கந்தப்பக்கோட்டையைச் சோ்ந்த முனியாண்டி மனைவி ராக்கு (47). இவா், ... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் 2 லட்சம் மரக் கன்றுகள் உற்பத்தி

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்யப்படும் என ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா். பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், மரக்க... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு, பழனி துண... மேலும் பார்க்க

தமிழா்களின் அறச்சீற்றம் இன்றைய சூழலுக்கும் தேவை: மல்லை சி.ஏ.சத்யா

புராணங்ளிலும், இலக்கியங்களிலும் இருந்த தமிழா்களின் அறச்சீற்றம் இன்றைய சூழலுக்கும் தேவையாக இருக்கிறது என மல்லை சி.ஏ.சத்யா தெரிவித்தாா். திண்டுக்கல் 11-ஆவது புத்தகத் திருவிழாவின் 9-ஆவது நாள் நிகழ்ச்சியா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்று மின்தடை

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் மன்னாா்சாமி செட்ட... மேலும் பார்க்க

ஞானத்தின் திறவு கோல் புத்தகங்கள்: எழுத்தாளா் ரா.நாறும்பூநாதன்

ஞானத்தின் திறவு கோலான புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என எழுத்தாளா் ரா.நாறும்பூநாதன் தெரிவித்தாா். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கி... மேலும் பார்க்க