பழனியில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு, பழனி துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக பழனி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி, கேஜி வலசு, சிவகிரிப்பட்டி சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
மேலும், ஒவ்வொரு துறை சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டுமெனில் முன்னரே தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காத நிலையில் மின்தடை தவிா்க்க முடியாததாகிவிடும். தவிர, இந்த மின் தடை மதுரை மாவட்டம் செம்பட்டி முதல் திருப்பூா் மாவட்டம் உடுமலை வரையிலான துணை மின் நிலையங்கள் பராமரிப்புக்காக நடைபெறுவதால் மின் தடையில் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.