புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.11.81 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 15 உயா் மின் கோபுர விளக்குகள் அமைக்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
இதற்காக ரூ.11.81 லட்சத்துக்கான காசோலையை ஆலையின் பொதுமேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவா் ரூபாவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.