செய்திகள் :

கோடா பயிற்சி மையங்கள்: மாணவர் சேர்க்கை குறைந்தாலும் குறையாத தற்கொலைகள்

post image

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில், இந்த கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் சேர்க்கை குறைந்தாலும், தற்கொலைகள் குறையாத அவலத்தை எடுத்துரைக்கின்றன தரவுகள்.

மருத்துவம் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்கும் கோடா நகர பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாக, கரோனா பொதுமுடக்கக் காலத்தைத் தவிர்த்து, தொடர்ந்து மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்தே வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 28 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுதான் கடந்த 8 ஆண்டுகளில் அதிகபட்சமாகும்.

இந்த ஆண்டில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டிருந்தாலும் கூட, இந்த எண்ணிக்கை ஒரு அபாயகரமானதாகவே உள்ளது. காரணம். நாடு முழுவதும் இதுபோன்ற பயிற்சி மையங்கள் அதிகரித்தது, கோடா பயிற்சி மையங்கள் அளிக்கும் ஆன்லைன் பயிற்சி போன்ற பல்வேறு காரணங்களால், கோடா நகரில் உள்ள பயிற்சி மையங்களில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடைசியாக, நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் கடந்த 16ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டில் மட்டும் இது 15வது தற்கொலை சம்பவம். கடந்த மாதமும், இதே போன்று ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு வரை, கோடா நகர பயிற்சி மையங்களில், மாணவர் சேர்க்கை நிரம்பி வழிந்த நிலையில் இந்த ஆண்டுதான் முதல் முறையாக சேர்க்கை குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 முதல் 35 சதவீத மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. ஆனால், தற்போதுவரை தற்கொலை எண்ணிக்கை குறையவில்லை.

2022ஆம் ஆண்டும் 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், 2018ல் இது 20 ஆகவும், 2016ஆம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 17 ஆகவும், 2015ஆம் ஆண்டு 18 ஆகவும் இருந்துள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

வயநாடு மக்களவை மற்றும் 24 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எ... மேலும் பார்க்க

90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!

அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோ... மேலும் பார்க்க

ரூ. 2 கோடி பணமோசடி! மத்திய அமைச்சரின் சகோதரரிடம் பெங்களூரில் விசாரணை

ரூ. 2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரின்கீழ் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கம் துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அ... மேலும் பார்க்க

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகா... மேலும் பார்க்க