செய்திகள் :

7.5% உள் ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்த கோரிக்கை

post image

7.5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தின் முதல்கட்ட கையெழுத்துத் தொகுப்பினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வீ. ப. ஜெயசீலனிடம் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் அமலராஜன், துணைத் தலைவர் ஐசக் சாம்ராஜ் மாவட்டச்செயலர் மற்றும் மாநிலச் செயலரான துரைச்சாமி பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பா. முருகன் முன்னிலை வகித்தார்.

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

5 அம்ச கோரிக்கைகள்:

• அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5% உயர் கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் முழுமையாக விரிவுபடுத்திட வேண்டும்.

• உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர் நலன் கருதி ஆங்கில வழி இணைப் பிரிவு மாணவர்களையும் கணக்கிலெடுத்து, பணியிட நிர்ணயம் செய்வதோடு, அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும்.

• தமிழ்நாட்டில் 1991-1992-ம் கல்வி ஆண்டுக்குப் பின்னர் துவக்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளித்து, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 28.02.2011-இல் பிறப்பித்த ஆணையினைச் செயல்படுத்திட வேண்டும்.

• உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை எளிமைப்படுத்துவதோடு தகுதியான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

• தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 2018 விதிகள் 2023-இல், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்கிட வேண்டும்.

தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படும் பொறுப்பு தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு

மாநாட்டில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் வா்த்தகம், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், சைபா் குற்றங்கள் போன்ற பிரச்னைகள் குறித்து தென் மாநிலங்களைச் சோ்ந்த காவல் துறைகளின் உயரதிகாரிகள் ஆ... மேலும் பார்க்க

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

அரசியலும் ஆன்மிகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னா... மேலும் பார்க்க

சென்னை வேப்பேரியில் தாறுமாறாக ஓடிய கார்.. பதறவைக்கும் விடியோ

வேப்பேரி அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை இடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இனோவா காரில் இருந... மேலும் பார்க்க

கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை

கோவையில் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.கோவை மாவட்டத்தில், காலை முதல் மழைக்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பிற்பகலுக்குப் பிறகு வானிலையி... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க