செய்திகள் :

சென்னையில் கன மழை முதல் மிக கன மழை எதிர்பார்க்கலாம்!

post image

சென்னை உள்பட 7 மாவட்டங்களில், இன்று(அக்.16) இரவு 8.30 மணி தொடங்கி, நாளை(அக்.17) காலை 8.30 மணி வரையிலான அடுத்த 12 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,

  • திருவள்ளூர்

  • சென்னை

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • ராணிப்பேட்டை

  • வேலூர்

  • திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 16) மாலை 5.30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கு திசையில் 190 கி.மீ. தூரத்திலும், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு இடையே வியாழக்கிழமை(அக்.17) அதிகாலை கரையைக் கடக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க

தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா ... மேலும் பார்க்க

'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்... மேலும் பார்க்க

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை... மேலும் பார்க்க