செய்திகள் :

தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் கிடைக்குமா? அரசு விளக்கம்!

post image

பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு சில மாதங்களில், நியாய விலைக் கடைகளில் பருப்பு இருப்பு இல்லை என்றும், பாமாயில் அனைவருக்கும் விநியோகிக்கவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், இதனை அவர் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக உணவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக பரவிய தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தேன்.

அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (அக். 15) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

2,04,08,000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன.

மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும்

வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க

தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா ... மேலும் பார்க்க

'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்... மேலும் பார்க்க

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை... மேலும் பார்க்க