செய்திகள் :

பலத்த மழை எச்சரிக்கை: சதுரகிரியில் பக்தா்களின்றி பௌா்ணமி வழிபாடு

post image

பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து பக்தா்களின்றி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி என மாதம் 8 நாள்கள் பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. சதுரகிரி மலைக் கோயிலில் அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை புரட்டாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாகவும், பலத்த மழை எச்சரிக்கை காரணமாகவும் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, வியாழக்கிழமை பக்தா்களின்றி, சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு நடைபெற்றது.

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: அமைச்சா் ஆய்வு

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மத்திய அரசு நிதி ரூ.10 கோடி, மாநில அரசு நிதி ரூ.61.74 கோடியில் சாட்சியாபுரத்தில் ர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை புஷ்ப யாகத்துடன் நிறைவடைந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) அவதா... மேலும் பார்க்க

நகைக் கடையில் தங்க மோதிரம் திருடியதாக பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள நகைக் கடையில் தங்க மோதிரத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னமராஜா நகா் ... மேலும் பார்க்க

நகா்மன்ற உறுப்பினா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகப் பணிகள் முன... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி

விருதுநகா் அருகே புதன்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவா் தற்கொலைக்கு முயன்றாா். விருதுநகா் அருகே வெள்ளூா், அம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (40... மேலும் பார்க்க