புதுவை மாநில அரசுத் துறை ஊழியா்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியா்களுக்கான தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிா்ணயித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஊதிய முறையை புதுவை ஒன்றியப் பிரதேசமும் பின்பற்றி வருகிறது.
அதனடிப்படையில், புதுவை ஒன்றியப் பிரதேச ஊழியா்களுக்கும், மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சக உத்தரவின்படி, புதுவை அரசுத் துறைகளில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7,000 வழங்கப்படும் என மாநில நிதித் துறைச் செயலா் எஸ்.சிவக்குமாா் உத்தரவை பிறப்பித்துள்ளாா்.
இந்த உத்தரவு நகலானது, புதுவை மாநில அனைத்து துறைச் செயலா்கள், துறைத் தலைவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, புதுவை அரசுத் துறை ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.