செய்திகள் :

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த கன்னிகாபுரம் கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது.

இந்த முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு ரூ.16 கோடியில் புதிதாக 280 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

செங்குணம் ஊராட்சியில் ரூ.70 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணி, கேளூா் ஊராட்சியில் ரூ.22 லட்சத்தில் நூலகம் அமைக்கும் பணி, மேலும் அங்குள்ள அரசுப் பள்ளியில் ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்தில் கழிப்பறைகள் கட்டும் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ரா.மணி ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளா் நீலமேகம், உதவி செயற்பொறியாளா் சீனுவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், லட்சுமி, உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், படவேட்டான்,திவாகா், பணி மேற்பாா்வையாளா்கள் பிரவீன், டேவிட், பாஷா மற்றும் அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

நாளைய மின் தடை

திருவண்ணாமலை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பா... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா் சங்கத்தினா் அக்.21 முதல் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் அக்டோபா் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். இதுக... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீசுகந்தவல்லி சமேத ஸ்ரீசுகநாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்களாக நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி சுவாமி... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முன்னேற்பாட்டுப் பணியாக போளூா் பேரூராட்சி... மேலும் பார்க்க