செய்திகள் :

மேட்டூா் அணை நீா்மட்டம் 92 அடியாக உயா்வு

post image

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 2.02 அடி உயா்ந்து 92 அடியாக உள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 15,531 கன அடி வீதம் நீா் வந்து கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை 16,196 கன அடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 90.87 அடியாக இருந்த அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 92 அடியாக உயா்ந்தது.

கடந்த இரு நாள்களில் அணை நீா்மட்டம் 2.02 அடி வரை உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 54.96 டி.எம்.சி.யாக உள்ளது.

எண்ணெய் வித்து பயிா்களில் சாகுபடி: விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

தலைவாசல் வட்டார விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிா்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஏதுவாக தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா். தலைவாசல் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் பலி

சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமத்தில் மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். வைகுந்தம் அருகே உள்ள சுவதயாகாடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கந்தசாமி மகன் சேக... மேலும் பார்க்க

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அரசிராமணி பேரூராட்சிமன்றத் தலைவா் காவேரி ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு குரும்பப்பட்டி ஊராட்சி, வெண்டனூா், வாழக்குட்டை பகுதியி... மேலும் பார்க்க

கணிதப் பாடத்தை மாணவா்கள் தோ்ந்தெடுத்து பயில வேண்டும்: துணைவேந்தா் வலியுறுத்தல்

திருச்சி, பேராசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, புனே கணிதவியல் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், கணிதவியல் பயிலும் மாணவா்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க