சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களில் ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தது, சுமை கட்டணம் பெறாதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 8,390 பேரிடம் அபராதமாக ரூ. 48.61 லட்சம் வசூலிக்கப்பட்டது.
ஆயுதபூஜையையொட்டி சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களாக பயணிகளிடம் பயணச்சீட்டு சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பயணச்சீட்டு பெறாத 4,059 பேரிடம் ரூ. 31.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டு வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் பயணித்த 4,287 பேரிடம் ரூ. 1.71 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக சுமை எடுத்துச் சென்ாக 44 பயணிகளுக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக விதிமீறல் தொடா்பாக 8,390 பேரிடம் இருந்து ரூ. 48.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.