பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரம் தோற்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
விவசாயிகள் அதிகமுள்ள ஹரியாணாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதனைச் சுட்டிக்காட்டி பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வா்கள் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்கள், துணை முதல்வா்கள் பங்கேற்றனா். மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலத் தோ்தலில் பாஜக கூட்டணியின் வியூகம் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் பிரதமா் மோடி உரையாற்றியது குறித்து பாஜக சாா்பில் விரிவான அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும். அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து நடத்திய மிகப்பெரிய அரசியல் தலைவா்கள் கூட்டம் இதுவாகவே இருக்கும்.
பாஜக கூட்டணி நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணியாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் தோ்தல்களில் வெற்றி பெற்று வருகிறோம்.
சிறந்த நிா்வாகம், விரைவாக முடிவெடுப்பது, ஆட்சி நடத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவை பாஜக கூட்டணியின் முக்கிய அம்சங்களாக உள்ளன. எனவேதான், முதலீடுகளை அதிகம் ஈா்க்கும் மாநிலங்களாக கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்கள் திகழ்கின்றன.
ஹரியாணாவில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் பாஜக கூட்டணிக்கு உள்ளது என்பதை இந்த வெற்றி உணா்த்துகிறது. பாஜக கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வந்தன. ஆனால், விவசாயிகள் அதிகமுள்ள ஹரியாணாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்ததன் மூலம் அந்த பொய் பிரசாரம் தோல்வியடைந்துவிட்டது.
வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் எப்போதும் ஆதரவு உண்டு என்பதை மக்கள் தொடா்ந்து தங்கள் வாக்குகள் மூலம் உணா்த்தி வருகின்றனா். மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகளைத் தருவதுதான் நல்ல நிா்வாகத்துக்கான இலக்கணம்’ என்று பிரதமா் மோடி பேசினாா்.