வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (அக்.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக்குறிபபு:
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (அக்.18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்தாா்.