செய்திகள் :

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

post image

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.

கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொள்ளை அடிக்கும் கும்பலை பிடிக்க சிறப்பு கண்காணிக்க கேமரா (எஃப்ஆர்எஸ்) கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சென்னை முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராய நகர் மற்றும் பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொண்டார். தி.நகரின் முக்கிய சாலையில் நடந்து சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர், ரங்கநாதன் தெரு சுற்றிலும் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 64 கேமராக்களும் எஃப்ஆர்எஸ்(FRS) என்று அழைக்கப்படும் FACE RECOGNISING SYSTEM கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி நெரிசலில் கொள்ளை அடிக்கும் கும்பல்கள் ஏற்கனவே குற்றவாளி வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்தான புகைப்படங்களை படம் பிடித்து காட்டும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தீபாவளியை முன்னிட்டு சென்னை முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அடையாள அட்டை கொடுக்க உள்ளோம். குழந்தைகளை கூட்டத்தில் தவறவிடாமலும், தவறவிட்டாலும், அவர்களின் பெற்றோர்களின் விவரங்களை அறியவும் இந்த திட்டம் மிகுந்த உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு படை எடுக்கும் பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டில் உள்ளதால் தாம்பரம், மாதவரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்து நெரிசலை குறைக்க சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூன்று இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்' - பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. தமிழ்நாடு தொழில் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுவதற்கு விருப்பமுள்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 22) கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்... மேலும் பார்க்க

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜ... மேலும் பார்க்க

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க