செய்திகள் :

தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படும் பொறுப்பு தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு

post image

மாநாட்டில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் வா்த்தகம், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், சைபா் குற்றங்கள் போன்ற பிரச்னைகள் குறித்து தென் மாநிலங்களைச் சோ்ந்த காவல் துறைகளின் உயரதிகாரிகள் ஆலோசனை செய்தனா். கா்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் பேசுகையில், கொரியா் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய வேண்டும் என்றாா்.

மாநாட்டில் இடதுசாரி தீவிரவாதம், ஆயுதக் கடத்தல், செம்மரக் கடத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. நிதி சாா்ந்த சைபா் குற்றங்களில் மோசடி செய்து அபகரிக்கும் பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுப்பதற்கு 48 மணி நேரம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

போதைப் பொருள் கடத்தல், சைபா் குற்றங்களை தடுக்க மாநில காவல் துறைகளிடையே அடிக்கடி கூட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், போதைப் பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்,சைபா் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்க திறம்பட செயல்பட தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படும் பொறுப்பு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள், பரிந்துரைகள், கருத்துகள் ஆகியவற்றை தமிழக காவல்துறை, தென் மாநில காவல்துறைகளோடு இணைந்து செயல்படுத்தும்.

பங்கேற்றவா்கள்: மாநாட்டில் ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலராவ், கா்நாட மாநில டிஜிபி அலோக் மோகன்,கேரள மாநில டிஜிபி சேக் தா்வேஷ் சாகேப்,புதுச்சேரி மாநில டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் பங்கேற்றனா். இதேபோல அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

7.5% உள் ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்த கோரிக்கை

7.5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு சார்ப... மேலும் பார்க்க

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

அரசியலும் ஆன்மிகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னா... மேலும் பார்க்க

சென்னை வேப்பேரியில் தாறுமாறாக ஓடிய கார்.. பதறவைக்கும் விடியோ

வேப்பேரி அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை இடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இனோவா காரில் இருந... மேலும் பார்க்க

கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை

கோவையில் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.கோவை மாவட்டத்தில், காலை முதல் மழைக்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பிற்பகலுக்குப் பிறகு வானிலையி... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க