செய்திகள் :

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

post image

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மழை வெள்ளம் ஒரு நாள் தான் வந்தது. அந்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. அதை சரிசெய்ய வேண்டிய அரசு அதை விடுத்து, மீனவர்களையும், படகுகளையும் வாடகைக்கு அமர்த்துகின்றனர். தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. மக்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றுவர போதிய பேருந்துகள் தமிழக அரசிடம் இல்லை. அதற்காக தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்ற நிலை உள்ளது. வாடகைக்கு எடுத்து நடக்கும் அளவுக்கு தமிழக அரசின் நிலை உள்ளது.

மற்றவர்களை நம்பி தான் அரசு இருக்கிறது என்றால் அந்த அரசு தேவையில்லை என்று தானே அர்த்தம். அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசை வாடகை அரசாக தான் பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கை பேருந்துகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளே மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன.

ஒரு நாள் மழைக்கே சென்னையின் நிலை இவ்வாறு இருக்கும்போது, டிசம்பர் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நிலை ஏற்படும் என்பது தெரியவில்லை. ஒரு நாள் மழை வெள்ளத்தை வடிய செய்துவிட்டு அதையே சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். வரவிருக்கும் பெருமழைக்கு இப்போதே திட்டமிட வேண்டும். சரியான நிரந்த தீர்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச் சாராயம், டாஸ்மாக், வேலையின்மை, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார். ஆனால் நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு தூர்தர்ஷன் மன்னிப்பு கோரிவிட்டது. அதோடு பிரச்னை முடிந்து விட்டது. திமுகவினர் அதை பெரிதுபடுத்தக் கூடாது. ஆளுநரை இகழ்ந்து பேசி வருகின்றனர்.

இதையும் படிக்க...குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரப்படுவதை தடுக்காமல், வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம் என்று கூறிக் கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளதையும், நலிவடைந்து வருவதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் இந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு தமிழக அரசு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தார். மக்கள் புரிந்து கொள்ளவில்லை. தேமுதிகாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பார். இப்போதும் காலம் உள்ளது. வருகின்ற 2026-ல் தேமுதிகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக இந்த அவலநிலை மாறி மக்களாட்சியை கொடுப்போம் என்று அவர் கூறினார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண... மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்ட... மேலும் பார்க்க

அதிமுகவில் நடிகை கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கெளதமியை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.பாஜகவில் இருந்த நடிகை கெளதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பா... மேலும் பார்க்க