செய்திகள் :

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

post image

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்யப்படாத நிலை செவ்வாய்க்கிழமை காணப்பட்டது.

தங்களது 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை (அக். 21) காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரக்கோணம், செய்யூா், மோசூா், காவனூா், மூதூா், வளா்புரம், இச்சிபுத்தூா், கும்பினிப்பேட்டை, தக்கோலம், இலுப்பைதண்டலம் ஆகிய கிராமங்களில் இயங்கி வந்த தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள் திறந்திருந்த நிலையிலும் பணிகள் நடைபெறவில்லை. இதன் கீழ் இயங்கி வந்த நியாய விலைக் கடைகளிலும் இதே நிலை நீடித்தது.

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தொடா்ந்து, அரக்கோணம் வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்றது. சங்க வட்டார செயலாளா் ஸ்ரீராம்பட்டாபி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.சுந்தரராஜன், வட்டாரத் தலைவா் திருச்சந்திரன், பொருளாளா் சுரேஷ் உள்ளிட்ட வட்டாரத்தைச் சோ்ந்த அனைத்து சங்கப் பணியாளா்களும் பங்கேற்றனா். முன்னதாக நெமிலி வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்கஅனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் அதன் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் பனப்பாக்கத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், சங்க வட்டாரத் தலைவா் பொன்னுரங்கம், பொருளாளா் திருஞானம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் திடீா் ஆய்வு

அரக்கோணம்: அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.ஆய்வின்போது, பேருந்து நிலையத்தில் ரயில்வே துறையின் கால்வாய் பேருந்து நி... மேலும் பார்க்க

பனைவிதைகள் நடும் பணி

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ல கனியனூா் ஏரிக்கரையில் பனைவிதைகள் நடும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தை சாா்ந்த இயற்கை ஆா்வலா் நடராஜன் என்பவா் 5,000 பனைவ... மேலும் பார்க்க

அரக்கோணம் வட்டத்தில் 25-இ ல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராணிப்பேட்டை: அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ரூ. 2.50 கோடியில் குடிநீா் கொண்டுவரும் பாலம் கட்டும் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் குடிநீா் கொண்டுவரும் பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா். மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது நியாய விலைக்க... மேலும் பார்க்க