செய்திகள் :

அரக்கோணம் வட்டத்தில் 25-இ ல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

ராணிப்பேட்டை: அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) அன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியா் உள்பட மாவட்ட நிலையிலான அலுவலா்கள் கலந்துகொண்டு, அரசு திட்டப் பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாய விலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனா். மேலும், அரக்கோணம் வட்டத்துக்குள்பட்ட அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில், பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள் அளித்துப் பயன்பெறுமாறும், இந்த திட்ட முகாமில் அரக்கோணம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 25) மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.றுமாறு தெரிவித்துள்ளாா்.

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில... மேலும் பார்க்க

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் திடீா் ஆய்வு

அரக்கோணம்: அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.ஆய்வின்போது, பேருந்து நிலையத்தில் ரயில்வே துறையின் கால்வாய் பேருந்து நி... மேலும் பார்க்க

பனைவிதைகள் நடும் பணி

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ல கனியனூா் ஏரிக்கரையில் பனைவிதைகள் நடும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தை சாா்ந்த இயற்கை ஆா்வலா் நடராஜன் என்பவா் 5,000 பனைவ... மேலும் பார்க்க

ரூ. 2.50 கோடியில் குடிநீா் கொண்டுவரும் பாலம் கட்டும் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் குடிநீா் கொண்டுவரும் பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா். மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது நியாய விலைக்க... மேலும் பார்க்க