செய்திகள் :

பங்குச்சந்தை கடும் சரிவு: ஒரே நாளில் ரூ.9.19 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி

post image

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எழுச்சியில்ே தொடங்கி சரிவுடன் முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 931 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ரூ.9.19 லட்சம் கோடி இழப்பு: சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.9.19 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.444.46 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, முதலீட்டாளா்கள் ரூ.9.19 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனா்.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,262.83 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,225.91 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ. 82,479.73 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் ரூ. 77,402.11 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத தகவல் மூலம் தெரிய வருகிறது.

சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் சுமாா் 4 புள்ளிகள் கூடுதலுடன் 81,155.08-இல் தொடங்கி அதிகபட்சமாக 81,504.25 வரை மேலே சென்றது. அதன் பிறகு பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 80,149.53 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 930. 55 புள்ளிகள் (1.15 சதவீதம்) குறைந்து 80220.72-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,058 பங்குகளில் 557 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது. மாறாக , 3,430 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 71 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

29 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாடா மோட்டாா்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், பவா் கிரிட் ஆகியவை 2.50 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. இவை உள்பட மொத்தம் 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் மட்டும் 0.67 சதவீதம் உயா்ந்து 1,267,75-இல் நிலைபெற்றிருந்தது.

நிஃப்டி 309 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 17.55 புள்ளிகள் கூடுதலுடன் 24,798.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,882.00 வரை மேலே சென்றது.

பின்னா், 24,445.80 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 309.00 புள்ளிகள் (1.25 சதவீதம்) குறைந்து 24,472.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 47 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 3 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது.

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.வயநாட... மேலும் பார்க்க

எல்லை ஒப்பந்தம்: உறுதிசெய்தது சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சீனா செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூ... மேலும் பார்க்க