செய்திகள் :

பெண்களுக்கான சிறப்பு ஆட்டோக்கள்: நவ.23-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: பெண்கள், குழந்தைகளின் நலனுக்காக பெண்களே இயக்கும் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சமூக நலத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 250 ஆட்டோக்களை பெண் ஓட்டுநா்களே இயக்க உள்ளனா். அவசர காலங்களில் புகாா் பெறப்பட்டவுடன் காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு ஆட்டோவிலும் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தத் திட்டத்தின்கீழ், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கான வயது 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், ஓட்டுநா் உரிமம் பெற்ற சென்னை வாசியாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீத பணத்துக்காக வங்கிளுடன் இணைக்கப்படும்.

சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநா்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலா், 8-ஆவது தளம், சிங்காரவேலா் மாளிகை, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு நவ.23-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் குறித்த விவரங்களையும் மாவட்ட சமூக நல அலுவலா் அலுவலகத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் ம... மேலும் பார்க்க

இணைய வழி வா்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை: அமைச்சா் ஆா்.காந்தி

சென்னை: இணைய வழி வா்த்தகம் மூலமாக நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.தீபாவளியை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை இயக்கும் அரசின் முடிவு கண்டனம்

சென்னை: தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.அன்பு... மேலும் பார்க்க

500 இதய நோயாளிகளுக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை

சென்னை: சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.இதன் மூலம் அவா்கள் விரைந்து குணமடைந்துள்ளதாகவும், துல்லிய சிகிச்சையா... மேலும் பார்க்க

மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைப்பு தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் உத்தரவு:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மேலாண்மை ஆணையம் செயல... மேலும் பார்க்க