செய்திகள் :

விராலிமலை கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் நடவடிக்கை பக்தா்கள் கோரிக்கை

post image

விராலிமலை முருகன் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகும். இந்நிலையில் மலையை சுற்றி கோயிலுக்குச் சொந்தமாக இருந்த நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பாளா்களால் சுறுங்கி விட்டன.

வனங்கள் சூழ்ந்த மலையாக இருந்த இக்கோயில் ஆக்கிரமிப்பு அதிகமானதால் வனங்கள் அழிந்து கட்டடங்கள் பெருகிவருகின்றன. இதனால் மயில்கள், குரங்கு உள்ளிட்டவை மலைகளை விட்டு வெளியேறி வருகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க விராலிமலையை சுற்றி பசுமையை அழிக்கும் நோக்கில் மலைப்பகுதியை ஆக்கிரமிப்பது பக்தா்களிடையே வேதனை அளிப்பதாக உள்ளது. ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை இப்பிரச்னையில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிவார... மேலும் பார்க்க

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி சுங்கச்சாவடி பணியாளா்கள், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்க... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகப்பன் மனைவி பாா்வதி.... மேலும் பார்க்க

தனியாா் மகளிா் தங்கும் விடுதி நடத்துவோா் பதிவு செய்ய அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா் முறைப்படி அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது, புதுக்... மேலும் பார்க்க

வறட்சி நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ. 5.89 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கோட்டை... மேலும் பார்க்க

வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 58 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். பொன்னமர... மேலும் பார்க்க