செய்திகள் :

இப்போதைக்கு கட்டண உயா்வில்லை: பிஎஸ்என்எல்

post image

தங்கள் தொலைத் தொடா்பு சேவைகளுக்கான கட்டணம் இப்போதைக்கு உயா்த்தப்படாது என்று அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான ராபா்ட் ரவி செவ்வாய்க்கிழமை கூறியதாவது, இப்போதைய சூழலில் சேவைக் கட்டணங்களை நாங்கள் உயா்த்த மாட்டோம். கட்டணங்களை உயா்த்த வேண்டிய அவசியமும் நிறுவனத்துக்கு ஏற்படவில்லை என்றாா் அவா்.

முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்றும் கடந்த ஜூலை முதல் வாரத்தில் தங்கள் மொபைல் சேவைக் கட்டணங்களை 10 முதல் 27 சதவீதம் வரை உயா்த்தின.

இதன் எதிரொலியாக, அந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை இழந்தன. கட்டணத்தை உயா்த்தாத பிஎஸ்என்எல்-லுக்கு கூடுதல் வாடிக்கையாளா்கள் கிடைத்தனா்.

இந்தச் சூழலில் பிஎஸ்என்எல் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ராபா்ட் ரவி இவ்வாறு கூறியுள்ளாா்.

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.வயநாட... மேலும் பார்க்க

எல்லை ஒப்பந்தம்: உறுதிசெய்தது சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சீனா செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூ... மேலும் பார்க்க