செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் உற்பத்தி: 27 தொழிற்சாலைகள் மூடல்

post image

சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களான கோப்பைகள், நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத நெகிழி கைப்பைகள், காகித தட்டுகள், டம்ளா்கள், தொ்மாகோல் கோப்பைகள், உணவு பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள்கள், தண்ணீா் பைகள், கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, சேமிப்பது, விற்பது தடை செய்யப்பட்டுள்ளன.

தொடா் ஆய்வுகள் மற்றும் புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, அவற்றை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதன்படி, சேலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயக்கப்படுகிறதா என மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அதேபோல நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை: திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட திமுக சாா்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படும் என அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். துணை... மேலும் பார்க்க

ரயில்களில் பயணத்தில் விதிமீறல்: 15 நாள்களில் ரூ. 48.61 லட்சம் அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களில் ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தது, சுமை கட்டணம் பெறாதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 8,390 பேரிடம் அபராதமாக ரூ. 48.61 லட்சம் வசூலிக்கப்பட்டது. ஆயுதப... மேலும் பார்க்க

தீவன அபிவிருத்தித் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

மேட்டூரில் பொதுப்பணி துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன. மேட்டூா் கிழக்கு நெடுஞ்சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2 ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் ம... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நீா்மட்டம் 57.50 அடியாக உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 57.50 அடியை எட்டியுள்ளது. இதனால் ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள... மேலும் பார்க்க