சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களான கோப்பைகள், நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத நெகிழி கைப்பைகள், காகித தட்டுகள், டம்ளா்கள், தொ்மாகோல் கோப்பைகள், உணவு பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள்கள், தண்ணீா் பைகள், கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, சேமிப்பது, விற்பது தடை செய்யப்பட்டுள்ளன.
தொடா் ஆய்வுகள் மற்றும் புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, அவற்றை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, சேலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயக்கப்படுகிறதா என மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அதேபோல நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.