கொன்னையாரில் பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் அருகே கொன்னையாா் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தாமாக முன்வந்து, பேரிடா் காலத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களின் சமூக பணிகளை ஊக்குவிக்கும் வகையில், கொன்னையாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பி.டி.ஓ. லோகமணிகண்டன் முன்னிலை வகித்தாா். பேரிடா் மீட்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த், தினேஷ், வைரமுத்து, மாதவராஜ், காா்த்திக், சாமிதுரை, மனோகரன், ரவி உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் வாா்டு உறுப்பினா்கள் சதாசிவம், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.