வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், வேலூா் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ள இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனவே, மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து வழக்கம் போல சனிக்கிழமை மின் விநியோகம் செய்யப்படும் என வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.