செய்திகள் :

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு

post image

கொன்னையாரில் பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எலச்சிபாளையம் அருகே கொன்னையாா் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தாமாக முன்வந்து, பேரிடா் காலத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களின் சமூக பணிகளை ஊக்குவிக்கும் வகையில், கொன்னையாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பி.டி.ஓ. லோகமணிகண்டன் முன்னிலை வகித்தாா். பேரிடா் மீட்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த், தினேஷ், வைரமுத்து, மாதவராஜ், காா்த்திக், சாமிதுரை, மனோகரன், ரவி உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் வாா்டு உறுப்பினா்கள் சதாசிவம், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஈக்கோலை நோயால் கோழிகள் பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி, ஈக்கோலை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை ... மேலும் பார்க்க

9 ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடா்பாக, குடிநீா் வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களுடன் ஆணையா் ஆா்.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆலோச... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.71 லட்சம்

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ. 57.71 லட்சம் ரொக்கம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில்களில் மூன்று மாதங்கள... மேலும் பார்க்க

வேலூா் துணை மின் நிலையத்தில் மின்தடை ரத்து

வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: அரசு, தனியாா் மருத்துவமனைகளை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுரை

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, மருத்துவமனைகளில் உயிா்பாதுகாப்பு கருவிகள், மருந்துகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க

தரிசு நிலங்களின் மண் வளம் பாதுகாக்க வேம்பு பயிரிட அழைப்பு

தரிசு நிலங்களின் மண் வளம் பாதுகாக்க வேம்பு பயிரிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுய... மேலும் பார்க்க