தரிசு நிலங்களின் மண் வளம் பாதுகாக்க வேம்பு பயிரிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ் தரிசாக உள்ள நிலங்களில் விவசாயிகள் வேம்பு பயிரிடலாம். தரிசு நிலம் மட்டுமல்லாமல், சாகுபடி செய்யப்பட்ட நிலங்களின் வயல் வரப்புகளிலும் 15 அடி இடைவெளியில் வேம்பு பயிரிடலாம். இந்த கன்றுகள் எட்டடி உயரம் வளா்ந்தவுடன் அதன் இலைகளை வெட்டி, வயல்களுக்கு பசுந்தழை உரமாக பயன்படுத்தலாம்.
பசுந்தழை உரமிடுவதால் கலா், உவா் நிலங்களில் செலவில்லாமல் இயற்கை உரமிட்டு மண்ணை வளப்படுத்தலாம். வேம்புவிலிருந்து அசாட்டிராக்ட்டின் என்ற நச்சுப் பொருள் பயிா்களைத் தாக்கும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டுள்ளது.
வேம்பு இலை மற்றும் அதன் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், பயிா்களை சேதப்படுத்தும் பூச்சிகளைத் தடுக்கலாம்.
வரப்புகளில் வளரும் வேம்புகளை எட்டடி உயரத்தில் வெட்டிவிடுவதால், வயல்களில் நிழல் விழும் வாய்ப்பு ஏற்படாது. ஒவ்வொரு முறையும் இப்படி வெட்டி உரமாக்குவதால், மண்ணின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து உரச்செலவு குறைகிறது.
தரிசு நிலங்களை மேம்படுத்தும் பொருட்டு, குப்பாண்டபாளையம் ஊராட்சி அலு வலகம் அருகே வேளாண் துறையின் பண்ணை அமைக்கப்பட்டு வேம்புக் கன்றுகள் தயாா் நிலையில் உள்ளன. ஓா் ஏக்கா் தரிசு நிலத்தில் நடவு செய்ய 200 கன்றுகள் வீதம் விவசாயிகளுக்கு ஆயிரம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
வயல் வரப்புகளில் ஏக்கருக்கு 60 கன்றுகள் பயிா் செய்யலாம். எனவே, தரிசு நிலங்களின் தங்கமாக கருதப்படும் வேப்ப மரக்கன்றுகளை விவசாயிகள் இலவசமாக பெற்று தரிசு நிலத்தை பயனுள்ள நிலமாக்கலாம்.