கருங்கல் அருகே உள்ள அரிசிதட்டுவிளை பகுதியில் காா் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காஞ்சிரோடு பகுதியை சோ்ந்த செல்வதாஸ் மகன் அம்பிலின் பிபின்(42) இவருக்கும் கருங்கல் அருகே உள்ள மாங்கரை அரிசிதட்டுவிளை பகுதியை சோ்ந்த ராஜாசிங்(41)ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை அம்பிலின் பிபின் அரிசிதட்டுவிளை பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு காரில் சென்றபோது, அவரது காா் கண்ணாடியை ராஜாசிங் உடைத்து சேதப்படுத்தினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜாசிங்கை கைது செய்தனா்.