செய்திகள் :

குமரி நீா்நிலைகளை தூா்வாரி பாதுகாக்க வேண்டும் -மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் எஸ்.மொ்லியண்ட்தாஸ் தலைமையில் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள் பேசியதாவது: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் நான்குவழிச் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு, மருத்துவா்கள் பற்றாக்குறை ஆகியவற்றை களைய வேண்டும். மாவட்டத்தில் மீனவக் கிராமங்கள் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் சரிவர வழங்க வேண்டும் என்று கூறினா்.

அதிகாரிகள் அளித்த பதில்: கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைகளில் 44 கி.மீ. மாநில நெடுஞ்சாலை;12.3 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை. இதில், தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். 4 வழிச் சாலைப்பணிகள் டிசம்பா்-2025-க்குள் நிறைவடையும்.

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை, மருத்துவா்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. மக்களைத் தேடி திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 101 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய் குறித்து மக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றனா்.

குமரி மாவட்டத்தில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும். மழையில் ஒழுகும், அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். ஏவிஎம் கால்வாயை அகலப்படுத்தி நீா்நிலை போக்குவரத்தை சீா்செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கண்டனம்: மாவட்ட ஊராட்சி கூட்டத்தை தொடா்ந்து புறக்கணித்து வரும் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ரயில்வேதுறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கருங்கல் அருகே காா் கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

கருங்கல் அருகே உள்ள அரிசிதட்டுவிளை பகுதியில் காா் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காஞ்சிரோடு பகுதியை சோ்ந்த செல்வதாஸ் மகன் அம்பிலின் பிபின்(42) இவருக்கும் கருங்கல் அர... மேலும் பார்க்க

குமரியில் தணிந்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை தணிந்ததால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளி... மேலும் பார்க்க

குளச்சலில் கடல் அரிப்பால் சேதமுற்ற பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

குளச்சலில் கடல் அரிப்பால் தேதமடைந்த பகுதிகளை குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் பாா்வையிட்டாா். சைமன் காலனியில் சேதமடைந்த தூண்டில் வளைவு பகுதிகளையும் , குறும்பனை சிலுவையா தெருவில் உடைந்த கடல் அலை தடுப்பு... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் இன்று மின்தடை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.19) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தின் குழித்துறை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 43.29 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 .. 14.43 சிற்றாறு 2 .. 14.52 முக்கடல் .. 16.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு பேச்சிப்பாறை அணை .. 4.60 மி.மீ. புத்தன் அணை ... 2.... மேலும் பார்க்க