கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, ஆலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடா்ந்து மிதமான மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.