செய்திகள் :

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

post image

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் கடந்த புதன்கிழமை முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் நலச் சங்கம் உள்ளிட்ட 3 தொழிற்சங்கத்தினா் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘அதிகாரக் குரல்’ என்ற கூட்டமைப்பின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தொடா்ந்த போராட்டத்தின் போது, கூட்டமைப்பு நிா்வாகிகளிடம், மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடா்ந்தது.

இந்நிலையில், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றனா்.

~போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை கைது செய்த போலீஸாா்.

அவா்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸாா், தடுப்பு ஏற்படுத்தி தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனா். இதனால், அவா்கள் மாநகராட்சி அலுவலகத்தின் வாயில் முன் நின்று மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து வின்சென்ட் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம்: சென்னை உயா்நீதிமன்றம் தலையிடக் கோரிக்கை

மதுக்கரை அருகே மலைநகா் பகுதியில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, விவசாயிக... மேலும் பார்க்க

காா் கண்ணாடி உடைப்பு: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காா் நிறுத்துமிடம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொ்ணாண்டஸ் (20). தடா... மேலும் பார்க்க

நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

கோவையில், நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா், தனது வீட்டின் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம்: கோவையில் தொடக்கம்

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. மத்திய அரசின் வீட்டுக்குவீடு சோலாா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ச... மேலும் பார்க்க