செய்திகள் :

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

post image

யூடியூபர் இர்ஃபான் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அவரது மனைவிக்கு சில நாள்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்றை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த விடியோவில், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தனியார் மருத்துவமனை, பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

மன்னிப்பு கிடையாது

ஏற்கெனவே குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே வெளிநாட்டில் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து பொது வெளியில் இர்ஃபான் வெளியிட்டதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அப்போது அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பிரச்னை முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“குழந்தையின் தொப்புள் கொடியை அவரே அறுத்தது கண்டிக்கக் கூடியது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று மருத்துவர் அல்லாத நபர், தொப்புள் கொடியை அறுத்தது, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2021 பிரிவு 34-ன் படி மீறப்பட்டுள்ளது.

மருத்துவச் சட்டத்தை மீறியவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்குள் அவரை அனுமதித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் பயிற்சி பெற தடை விதிப்பதற்கான தமிழ்நாடு மருத்துவச் சங்கத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பு வழங்கப்படாது. மருத்துவத் துறை சார்பில்தான் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜ... மேலும் பார்க்க

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சிலை திறப்புநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நா... மேலும் பார்க்க