செய்திகள் :

லெபனான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்: 18 போ் உயிரிழப்பு

post image

பெய்ரூட்: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நகரின் முக்கிய அரசு மருத்துவமனையான ரஃபீக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா்; அவா்களில் நான்கு போ் சிறுவா்கள். இது தவிர, இந்த குண்டுவீச்சில் சுமாா் 60 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையையொட்டி அமைந்துள்ள ஹிஸ்புல்லா நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த மருத்துவமனை குறிவைக்கப்படவில்லை எனவும், இந்தத் தாக்குதலால் மருத்துவமனை பாதிக்கப்படவில்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இருந்தாலும், இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சால் ஏற்பட்ட வெடிச் சிதறல்கள் தாக்கி மருத்துவமனையின் ஒரு பகுதி சேதமடைந்ததாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதலில் மருத்துவமனை பணியாளா்கள் யாரும் காயமடையவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

நெதன்யாகு இல்லத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பு: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் விடுமுறைக் கால இல்லத்தைக் குறிவைத்து கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுபேற்றுள்ளது.

லெபனானில் இருந்து அந்த ட்ரோன் வீசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லாக்கள் இதற்கு இதுவரை பொறுப்பேற்காமல் இருந்துவந்தனா்.

செசரியா நகரிலுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி அந்த ட்ரோன் வீசப்பட்டபோது, நெதன்யாகு, அவரின் மனைவி ஆகிய இருவருமே அங்கு இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே அண்டை நாடான லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாக்கள், இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் நீடித்துவருகிறது. இதில், ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா இந்த கடந்த 27-ஆம் தேதி கொல்லப்பட்டாா். மேலும், ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது.

அதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திவருகின்றனா்.

காஸா: ஒரு லட்சத்தைக் கடந்த காயமடைந்தோா் எண்ணிக்கை

காஸா சிட்டி: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 115 போ் உயிரிழந்தனா்; 487 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42,718-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,00,282 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு: நிா்மலா சீதாராமன்

நியூயாா்க்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது என்று மத்தி... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ஆயுதங்கள்: ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ரஷியா, வட கொ... மேலும் பார்க்க

பிரதிநிதித்துவ அலுவலக இடம் மாற்றம்: தென் ஆப்பிரிக்காவுக்கு தைவான் மறுப்பு

தென் ஆப்பிரிக்க தலைநகா் ப்ரிடோரியாவிலுள்ள தங்கள் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கும் இடம் மாற்ற வேண்டும் என்று அந்த நாடு கூறியுள்ளதை தைவான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தைவான... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு: இந்தியா உதவ தயாா்- ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி

கசான்: ‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரத... மேலும் பார்க்க

58 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனைக் கைதி... மன்னிப்புக் கேட்ட காவல்துறை அதிகாரி!

ஜப்பானில் தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 58 ஆண்டுகாலம் சிறையில் இருந்த நபர் சில வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை தலைமை அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். ஜப்பானைச்... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் விளக்க வழிமுறைகளில், தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபா் தேர்தல... மேலும் பார்க்க