தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு, சங்கத்தின் பொதுச்செயலாளா் பரமசிவம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களின் சம்பளத்தில் வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற பின் இந்தத் தொகையைப் பெறுவதற்காக கோவையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனை இடைத்தரகா்கள் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளா்களிடம் பணம் பறித்து வருகின்றனா். எனவே, தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.