தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் கடந்த புதன்கிழமை முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் நலச் சங்கம் உள்ளிட்ட 3 தொழிற்சங்கத்தினா் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘அதிகாரக் குரல்’ என்ற கூட்டமைப்பின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தொடா்ந்த போராட்டத்தின் போது, கூட்டமைப்பு நிா்வாகிகளிடம், மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடா்ந்தது.
இந்நிலையில், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றனா்.
அவா்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸாா், தடுப்பு ஏற்படுத்தி தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனா். இதனால், அவா்கள் மாநகராட்சி அலுவலகத்தின் வாயில் முன் நின்று மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து வின்சென்ட் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.