புதுச்சேரியில் உள்ள எஸ்சி, எஸ்டி தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து, அந்த மையத்தின் புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூா்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாய இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டண்சி சேவை மையம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைவரும் பங்கேற்கலாம்.
ரெட்டியாா்பாளையத்திலுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாய இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் சனிக்கழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் பங்கேற்பவா்கள் தங்களது தற்குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.