செய்திகள் :

1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து 291 ஆல் அவுட்டானது. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 221 ரன்கள் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் 144க்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இதையும் படிக்க: கோப்பையை வென்றார் அர்ஜுன் எரிகைசி..! தவறவிட்ட உலக சாதனை!

1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக 2 சுழல்பந்து வீச்சாளர்கள் நோமன் அலி (11) சஜித் கான் (9) மட்டுமே 20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.

1987க்குப் பிறகு 2 பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள். பாகிஸ்தானுக்கு இது 7ஆவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஜித் கான்.

சஜித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

பாபர் அசாமுக்கு மாற்று வீரராக களமிறங்கியவர் அசத்தல்; பாகிஸ்தான் கேப்டன் பாராட்டு!

இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகி... மேலும் பார்க்க

கேமரூன் கிரீன் அணியில் இல்லாதது ஆஸி.க்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மிட்செல் ஸ்டார்க் பதில்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு திட்டங்களில் மாற்றம் இருக்கும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.இந்த... மேலும் பார்க்க

நியூசி. வீரர் ரச்சின் சதத்துக்கு பெங்களூரு ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் அக்டோபர் 16இல் தொடங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.2ஆம் நாளில் பேட்டிங் செய... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது தெ.ஆ.!

தென்னாப்பிரிக்க அணியிடம் ஆஸ்திரேலிய மகளிரணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.2024 ஆம் ஆண்டு மகளிருக்கான 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துப... மேலும் பார்க்க