புதுவை மாநிலத்தில் 128 காவலா்களுக்கு தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் தற்போது காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதையடுத்து, புதிய காவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள், ஆயுதப்படைப் பிரிவில் பணியில் சோ்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே ஆயுதப்படையில் இருந்தவா்கள் காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், தற்போது காவல் நிலையங்களில் காவலா் நிலையிலிருப்பவா்களில் 128 பேருக்கு தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை காவல் தலைமைக் கண்காணிப்பாளா் சுபம் ஹோஸ் பிறப்பித்துள்ளாா்.