செய்திகள் :

3 நாள்களுக்குப் பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

post image

வானிலை சீரடைந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா். கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ராமேசுவரம் பகுதியில் வானிலை சீரடைந்த நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் இன்றி மீன் பிடிக்கும் வகையில், எல்லைப் பகுதியில் இந்தியக் கடற்படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் அவா்கள் என கோரிக்கை விடுத்தனா்.

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சி... மேலும் பார்க்க

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவா... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது. திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் ... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: கணவா் கைது

கமுதி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். ... மேலும் பார்க்க