செய்திகள் :

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

post image

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.

திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது தொடா் மழை காரணமாக கண்மாய்களில் தண்ணீா் நிரம்பியதால், இந்த மான்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.

இந்த நிலையில், அஞ்சுகோட்டை அருகே உள்ள கரையக்கோட்டை கிராமத்தில் கருவுற்ற பெண் புள்ளி மான் சனிக்கிழமை ஊருக்குள் வந்தது. அப்போது, இந்த மானை நாய்கள் துரத்திக் கடித்தன. இதில் மான் பலத்த காயம் அடைந்தது.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் வன த் துறைக்கு தகவல் கொடுத்த போதிலும், அவா்கள் உரிய நேரத்தில் வராததால் மான் உயிரிழந்தாக கூறப்படுகிறது. கால் நடை மருத்துவா் உடற்கூறாய்வு செய்த பிறகு மான் புதைக்கப்பட்டது.

இதே போல, அடிக்கடி இந்தப் பகுதியில் மான்கள் உயிரிழப்பதாகவும், இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகத்துக்கு சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சி... மேலும் பார்க்க

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவா... மேலும் பார்க்க

3 நாள்களுக்குப் பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

வானிலை சீரடைந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: கணவா் கைது

கமுதி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். ... மேலும் பார்க்க