செய்திகள் :

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 87 பேர் பலி!

post image

காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை(அக். 19) நள்ளிரவு, வடக்கு காஸாவின் பெய்ட் லாஹியா நகரத்தில் இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸாவில் இந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில்தான்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் சம்பவ இடத்திலிருந்து தகவல்களை முழுமையாகப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர், இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களால் அப்பகுதி முழுவதும் உருக்குலைந்து போயுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட மீட்புப் பணியில் ஈடுபடும் வாகனங்களும் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை பாலஸ்தீன மக்கள் சுமார் 42,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளதால் அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காஸாவில் சுமார் 2.30 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அப்பகுதிகளில் தற்போது 3 மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், மருந்துகள் பற்றாக்குறை நிலவுவதால் காயமடைந்தோருக்கும், உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

போதிய உணவு, எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியுறுவதாக காஸா அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டாலும் சண்டை தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதால், காஸாவில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே தெரிகிறது.

இதையும் படிக்க:ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டாலும் சண்டை தொடரும்! - இஸ்ரேல் அறிவிப்பு

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின் மீது தாக்குதல்!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (அக். 20) தாக்குதல் நடத்தியது.இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த தலைமைத் தரவரிசைப் பட்டியலில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்... மேலும் பார்க்க

தென் கொரியாவுக்கு 20 குப்பை பலூன்கள்: மீண்டும் அனுப்பியது வட கொரியா

தென் கொரியாவுக்கு குப்பைகள் கட்டப்பட்ட பெரிய அளவிலான 20 பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பியுள்ளது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை குப்பைகள் கட்டப்பட்ட பலூன்கள் எல்லையில் அனுப்பப்பட்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் வசிக்கும் மக்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாரா... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள்; மொத்த பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின... மேலும் பார்க்க