செய்திகள் :

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள்; மொத்த பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

post image

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.

சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

இந்த நிலையில் பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சிந்து மாகாணத்தில் உள்ள சங்கர் மற்றும் மிர்புர்காஸ் மாவட்டங்களில் சனிக்கிழமை இந்த வழக்குகள் உறுதி செய்யப்பட்டதாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மிர்புர்காஸ் மற்றும் சங்கரிலிருந்து நடப்பு ஆண்டு போலியோ வழக்குகள் பதிவாவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கடந்த பத்து மாதங்களில், பாகிஸ்தானில் 39 போலியோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 20 பலுசிஸ்தானிலிருந்தும், 12 சிந்துவிலிருந்தும், ஐந்து கைபர் பக்துன்க்வாவிலிருந்தும், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்திலிருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.

முன்னதாக ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் வசிக்கும் மக்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாரா... மேலும் பார்க்க

190 கைதிகளைப் பறிமாறிக் கொண்ட ரஷியா - உக்ரைன்

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க் கைதிகளை புதன்கிழமை பரிமாறிக் கொண்டன. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனுடன் நடைபெற்று வ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மேலும் 4 சிறுவா்களுக்கு போலியோ

பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக போலியோ உறுதி ச... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா் கல்வித் திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி: ரூ.17.22 கோடியாக இரட்டிப்பு

இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழா்களின் கல்வித் திட்டத்துக்கு உதவும் வகையில், இந்தியாவின் நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.17.22 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் உள்கட்டமைப்பு வளா்ச்ச... மேலும் பார்க்க

சூடானில் 31 லட்சம் மக்களுக்கு காலரா பாதிப்பு அபாயம்: யுனிசெஃப்!

சூடானில் 31 லட்சம் மக்களுக்கு காலரா பரவுவதற்கான அபாயம் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் 5 லட்சம் குழந்தைகள் உள்பட 31 லட்சம் மக்களுக்கு காலரா நோய்த்தொற்று அபா... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல்?

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை (அக். 16) நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்... மேலும் பார்க்க