செய்திகள் :

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல்?

post image

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை (அக். 16) நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இந்த நிலையில், இஸ்ரேலிய நகரமான செசரியாவில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி சனிக்கிழமை (அக். 19) ட்ரோன் தாக்குதல் ஏவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதலின்போது, பிரதமரின் வீட்டில் யாரும் இல்லை என்றும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது ``ஆளில்லா விமானம் மூலம் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டில் தாக்குதல் நடந்தபோது, பிரதமரோ அவரது குடும்பத்தினரோ யாரும் அங்கில்லை. இந்த தாக்குதலில் யாருக்கும் காயமோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை’’ என்று கூறினார்.

இதையும் படிக்க: இந்திய தூதரகங்களை மூட வேண்டும்! கனடாவில் சீக்கியர்கள் பேரணி

அதற்கு முன்னதாக, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலில் உள்ள கட்டடத்தைத் தாக்கியது என்றும், தாக்குதல் நடத்தவிருந்த வேறு 2 ட்ரோன்களை இஸ்ரேலிய ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

அக். 7 ஆம் தேதிக்குப் பிறகான தாக்குதலில் இருந்து, இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன.

லெபனான் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் இருந்து, லெபனான் போரில் குறைந்தது 1,418 பேர் வரையில் இறந்துள்ளனர்; ஆனால், உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

சூடானில் 31 லட்சம் மக்களுக்கு காலரா பாதிப்பு அபாயம்: யுனிசெஃப்!

சூடானில் 31 லட்சம் மக்களுக்கு காலரா பரவுவதற்கான அபாயம் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் 5 லட்சம் குழந்தைகள் உள்பட 31 லட்சம் மக்களுக்கு காலரா நோய்த்தொற்று அபா... மேலும் பார்க்க

இந்திய தூதரகங்களை மூட வேண்டும்! கனடாவில் சீக்கியர்கள் பேரணி

ஒட்டாவா: இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளது உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.கனடா மக்களை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு இந்திய அரசு து... மேலும் பார்க்க

பன்னுன் கொலை முயற்சி: அமெரிக்கா குற்றஞ்சாட்டிய ‘ரா’ அதிகாரி யார்?

புது தில்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி என அழைக்கப்படும் குா்பந்த்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ரா அதிகாரி விகாஸ் யாதவ், தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில... மேலும் பார்க்க

சிறிய, அசிங்கமான.. யாஹ்யா சின்வாரின் உடலுடன் இருந்த இஸ்ரேல் வீரரின் அனுபவம்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் ஏற்படுத்திய வலி மற்றும், அவர் இல்லாமல் இருக்கும் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்ற உணர்வும்.. என்று இஸ்ரேல் வீரர் இடாமர் எய்டம் தெரிவித்துள... மேலும் பார்க்க

யாஹியா சின்வாா் படுகொலை!முடிவு கட்டப்பட்டதா ஹமாஸுக்கு?

‘யாஹியா சின்வாா் ஒரு நடமாடும் சடலம். அவருக்கு எப்போதோ முடிவுகட்டப்பட்டது!’ ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனீயே தங்கள் உளவு அமைப்பால் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த... மேலும் பார்க்க

உக்ரைன் போா் முடிவுக்கு கால நிா்ணயம் செய்வது கடினம்: ரஷிய அதிபா் புதின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம் என்றும், போா்ச் சூழல் தொடா்பான இந்திய பிரதமா் மோடியின் அக்கறையை பாராட்டுவதாகவும் ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க